கணவரை விவாகரத்து செய்ய என்ன காரணம் என்ன தெரியுமா…? மேடையில் பதில் கொடுத்த ஸ்வாதி…! அதை கேட்டு ஷாக்கான ரசிகர்கள் …!!

தமிழில் சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பெருவாரியான தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்வாதி.தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர் பல இளவட்டங்களின் கைபேசியில் வால்பேப்பராக குடியேறினார். அந்த அளவுக்கு ரசிகர்கள் இவருக்கு கிடைத்தனர். அதனை தொடர்ந்து விரல்விட்டு என்னும் அளவிலான சில படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகிப் போனார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது.அதன் பிறகு உடல் எடையை குறைத்து மீண்டும் ஒல்லியான இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி பேட்டி ஒன்றை கொடுத்திருந்தது பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. மேலும், தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வந்தார்.

உச்சகட்டமாக திருமணம் முடிந்த அடுத்த நாள் முதலிரவு அறையில் கசங்கிய ஆடைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். முதலிரவு முடிந்தது என்று கேப்ஷன் வைத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். திரைப்படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்துக் கொண்டிருந்த நடிகை ஸ்வாதி திருமணம் முடிந்த அடுத்த நாளே முதலிரவு முடிந்து விட்டது என்று புகைப்படத்தை வெளியிடுகிறார். அடுத்த ஒரு வாரத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் நீந்தியபடியே பேட்டி கொடுக்கிறார். என்ன இதெல்லாம்..? என்று ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். அதன் பிறகு சில காலம் சோசியல்

சமூகவலைதளங்களில் இருந்து காணாமல் போனார் நடிகை ஸ்வாதி.இந்நிலையில், நடிகை ஸ்வாதி தன்னுடைய கணவரை பிரிந்து விட்டார் என்று தகவல்கள் பரவியது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய சமூக வலைத்த பக்கங்களில் தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் நீக்கி இருந்தார் ஸ்வாதி.இது குறித்து அப்போது கேள்வி எழுப்பிய போது என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் சமூக வலைதளங்களில் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன் என பதிவு செய்திருந்தார். இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்வாதியிடம்

உங்களுடைய கணவரை பிரிந்து விட்டீர்கள் என்று தகவல்கள் வருகிறது. அதற்கு என்ன காரணம்..? நிஜமாகவே கணவரை பிரிந்து விட்டீர்களா..? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை ஸ்வாதி, நான் என்னுடைய 16 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். அப்போது எனக்கு எப்படி பேச வேண்டும்..? எப்படி பேசக்கூடாது..? என்ற எந்த ஒரு அனுபவமும் எனக்கு கிடையாது.அப்போது எனக்கு இதைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஆனால், இப்போது ஒரு தொழில் முறை நடிகராக எல்லாவற்றிற்கும் சில விதிமுறைகள் இருக்கிறது என்பதை உணர்ந்து இருக்கிறேன். 

மட்டுமில்லாமல் எனக்கென நான் சில விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறேன். அதன்படி, என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை பொதுவான ஒரு நிகழ்ச்சியில் பேசுவது தவறு என்று நினைக்கிறேன். இப்போது நடக்கக்கூடிய நிகழ்ச்சிக்கும் இன்றைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கேள்விகளுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. எனவே இந்த கேள்விக்கு இப்போது நான் பதில் கொடுக்க விரும்பவில்லை என பேசி இருக்கிறார் நடிகை ஸ்வாதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *