என்னுடைய அந்த இடத்தை பற்றி கேட்டால்…! நான் அதைத்தான் சொல்வேன் வெளிப்படையாக பேசிய நீலிமா …!

நடிகை நீலிமா நெகட்டிவ் கமெண்டுகள் குறித்து பேசியுள்ளார். நடிகை நீலிமா தமிழ் சினிமாவில் நடிகர் கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லி வேடத்தில் அதிரடி காட்டி வருகிறார். அண்மையில் நீலிமா பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.

அதில் அவரிடம் ” பாடி ஷேமிங் (உடல் கேலி), ஏஜ் ஷேமிங் (வயது கேலி) இதையெல்லாம் நீங்கள் பேஸ் செய்திருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. பேட்டி அதற்கு பதிலளித்த நடிகை நீலிமா “இரண்டாவது குழந்தை பிறந்ததற்கு பின்னர் தான் உடல் எடை கூடியது. இந்த குழந்தை பிறப்பு, நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை விஷயங்கள், நான் எடுத்துக்கொண்ட உணவுகள், இதெல்லாம் சேர்த்துதான் அதிக அளவு உடல் எடை அதிகரித்தது.என்னிடம் “நீலிமா வெயிட் (Weight) போட்டுடீங்களா? என்று கேட்பார்கள்.

மேலும் மிகவும் நெகட்டிவாக என்னுடைய மார்பு பற்றியெல்லாம் பேசும்போது, கமெண்ட் செய்யும்போது. எனக்கு அதற்கு உடனடியாக பதில் கொடுக்க வேண்டும் என்று தோணும். நான் இன்னும் என் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன் என்றெல்லாம் சொல்ல தோணும். ஆனால் அவனுக்கெல்லாம் பதில் சொல்லி என்னவாக போகிறது என்று கடந்து சென்று விடுவேன்” என்று நீலிமா பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *