சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. ஆதி குணசேகரனாகவே ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்த இவர் ஒரு திறமையான நடிகர். எதிர் நீச்சல் சீரியலின் முழு வெற்றிக்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது அந்த சீரியல் நடிக்கும் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் சீரியலை தூக்கி நிறுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பது ஆதிகுணசேகரன் கதாபாத்திரம்.சீரியல் மட்டுமன்றி ஒரு சில படங்களில் நடித்தும் இறுக்கின்றார். அதாவது ‘பரியேறும் பெருமாள், கொம்பன், ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.
அதுமட்டுமல்லாது ‘கண்ணும் கண்ணும் மற்றும் புலி வால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் இன்றைய தினம் மாரடைப்பால் சென்னையில் காலமானார். இவரின் இறப்பிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இவருடன் பணியாற்றிய சீரியல் தயாரிப்பாளர் மணி மாரிமுத்து குறித்தும், அவருடைய கடைசி ஆசை குறித்தும் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.
அதாவது அவர் கூறுகையில் “கடந்த 2 வருடத்தில் மாரிமுத்து அடைந்த உச்சம் மிகப்பெரியது, குறிப்பாக வீடு கட்ட வேண்டும் என்பது தான் அவருக்கு இருந்த மிகப்பெரிய ஆசை, அவர் இப்போது வீடு கட்டி கொண்டிருக்கும் போதே இப்படி ஒரு துயரம் நிகழ்ந்துள்ளது. இவரின் உடைய இந்த திடீர் இறப்பை பார்க்கும் போது நாம் நம் உடல் நலம் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்ற அச்சம் ஏற்படுகிறது” என மிகவும் துக்கத்துடன் கூறியுள்ளார் தயாரிப்பாளர் மணி.