என் காதலர் உடல் ரீதியாகும் மன ரீதியாகவும் துன்புறுத்தினார்…! ஆண்ட்ரியா சொன்ன ஷாக்கிங் நியூஸ்…!

நடிகை ஆண்ட்ரியா பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் படத்தின் பாடலை பாடி, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் பாடல்களை பாடியும் பிரபலமானார். ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்து பின் லீக் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின் அவரை விட்டு பிரிந்த ஆண்ட்ரியா, படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

பிசாசு 2, நோ எண்ட்ரி, ’கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்தும் சில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். இடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஆண்ட்ரியா, மேலாடையின்றி உள்ளாடையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் இசை என இரண்டிலும் கலக்கி வருகிறார்.இந்நிலையில் பேட்டியில் கலந்துகொண்ட ஆண்ட்ரியா, திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ஒரு கட்டத்தில் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று கவலைப்பட்டதாகவும்,

ஆனால் இப்போது திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லை. கடந்த சில வருடங்களில் திருமணம் செய்துகொண்ட சிலர் மகிழ்ச்சியாக இல்லை. நிறைய பேர் திருமணம் செய்துகொள்ளாமல் மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள். மேலும் அவர் கூறுகையில், என் காதலர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தினார். இந்த விஷயத்தால் மிகுந்த மனவுளைச்சலில் இருந்தேன். இதனால் தான் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தேன் என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *