மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமா வலம் வந்த நஸ்ரியா. கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து இவர் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா எனப் தமிழில் பல படங்களில் நடித்து வந்தார். பிஸி நடிகையாக இருந்த நஸ்ரியா பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.பொதுவாக திரைப்படங்களில் நடிக்கும்போது மாடர்ன் உடை போட்டு நடித்தாலும் அதில் கவர்ச்சி இல்லாமல் பார்த்துக்கொள்வார் நஸ்ரியா. அவரது அனைத்து படங்களிலும் அதை பார்க்க முடியும். இந்த நிலையில் நய்யாண்டி திரைப்படத்தை இயக்குனர் சற்குணம் இயக்கினார்.
தனுஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இந்த படத்தில் நஸ்ரியாவிற்கு ஒரு இடுப்பு க்ளோஸ் அப் சீன் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக நஸ்ரியாவிடம் கேட்டபோது அவர் கண்டிப்பாக முடியாது என மறுத்துவிட்டார். எனவே இயக்குனர் வேறு நடிகையை அழைத்து அவரது இடுப்பை ஷூட் செய்து படத்தில் சேர்த்துவிட்டார். இந்நிலையில் நய்யாண்டி படத்தின் ஷூட்டிங்கில் இயக்குனர் நஸ்ரியாவின் இடுப்பை க்ளோசப் வைக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் இதற்கு நஸ்ரியா மறுப்பு தெரிவித்துவிட்டார்.
ஆனால் இயக்குனர் வேறொரு பெண்ணை வைத்து இந்த இடுப்பு காட்சியை படமாக்கி விட்டனர். இதனால் நஸ்ரியா இடுப்பை காட்டி நடித்துவிட்டார் என அப்போது அந்த செய்தி எங்கும் பரவியது. உடனே தயாரிப்பாளர் சங்கத்திடம் சென்ற நஸ்ரியா இது குறித்து இயக்குனர் மீது குற்றம் சாட்டினார். அதற்கு இயக்குனர் பதிலளிக்கும்போது எனக்கு அந்த சீன் தேவைப்பட்டது. அதனால் நஸ்ரியாவிடம் கேட்டேன். அவர் மறுத்ததால் வேறொரு பெண்ணை வைத்து எடுத்தேன். என பதிலளித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கமும் அது சரிதான் என பேசியது. இந்த திரைப்படம் வெளியான போது நஸ்ரியா இடுப்பை காட்டி நடித்து விட்டார் என்று பல பத்திரிகைகளில் வெளியானது. இதனால் கோபம் அடைந்த நஸ்ரியா இயக்குனர் மீது குற்றம் சாட்டினார். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் இந்த விஷயத்தை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. தற்போது வரை நஸ்ரியாவிற்கு நீதி கிடைக்கவில்லை என்று பயில்வான் கூறியுள்ளார்.