நடிகை தனக்கு இருக்கும் போதை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமான போதை இருக்கும். சிலருக்கு அவங்க வேலையே போதையா இருக்கும். அதைப்போல நடிப்பு எனக்கு அப்படி இருக்கு. எப்படின்னா, ஒரு படத்துல நடிக்கும் போது நான் இந்துஜாவா இல்லாம, இன்னொருத்தராதானே மாறியிருக்கேன். அதாவது யாரோ ஒரு கேரக்டராகத் தானே இருப்பேன். அப்படி ஒவ்வொரு படத்துலயும் நான் வேறொரு ஆளா மாறுறது, வாழறது எனக்கு போதை மாதிரி இருக்கு”– லேசானப் புன்னகையுடன் பேசுகிறார் நடிகை இந்துஜா.‘மேயாத மானி’ல் தொடங்கி ‘பில்லா பாண்டி’, ‘மகாமுனி’, ‘பிகில்’, ‘மூக்குத்தி அம்மன்’, தனுஷின் ‘நானே வருவேன்’ என பயணித்தவர், இப்போது ‘பார்க்கிங்’ படத்தில் பேராசிரியையாக நடித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. பிரபல நடிகை தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. இவர் தனது முதல் படத்திலேயே மிரட்டலான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு பில்லா பாண்டி, மகாமுனி, பிகில் போன்ற படங்களில் நடித்தார்.அதன்பிறகு நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நானே வருவேன் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது இவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய ‘பார்க்கிங்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் குறித்து அவரிடம் கேட்டபொழுது அதில் ஆத்திகா என்ற பேராசிரியையாக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
நடிகை பேட்டி இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்தார். அதில் அவர் கூறுகையில், “ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமான போதை இருக்கும், சிலருக்கு அவங்க வேலையே போதையா இருக்கும். அதைப்போல எனக்கு நடிப்பு மீது போதை.அது எப்படின்னா ஒரு படத்துல நடிக்கும் போது நான் இந்துஜாவா இல்லாம, இன்னொருத்தராதானே மாறியிருக்கேன். அது எனக்கு சொர்கம், அதாவது யாரோ ஒரு கேரக்டராகத் தானே இருப்பேன் அப்படி ஒவ்வொரு படத்துலயும் நான் வேறொரு ஆளா மாறுறது வாழறது எனக்கு போதை மாதிரி இருக்கு” என்று அவர் கூறியுள்ளார்.