இப்படி எல்லாம் இருந்தால் தான் நடிகையாக இருக்க முடியும்…! சாய் பல்லவி ஓபன் டாக்…!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால், இதற்க்கு முன்பே மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் ரசிகர்களிடம் சாய் பல்லவியை கொண்டு சேர்த்துவிட்டது. தியா படத்தை தொடர்ந்து மாரி 2, என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து வந்த சாய் பல்லவி, சில ஆண்டுகள் இடைவேளைக்கு பின், மீண்டும் கார்கி எனும் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார்.மலையாளத்தில் 2015 -ம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சாய் பல்லவி.

இவர் நடிப்பை தாண்டி நடனத்திலும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது சாய் பல்லவி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாய் பல்லவி, இரண்டாம் வகுப்பு படிக்கும் போது சிம்ரனை பார்த்தேன். அந்த படம் என்ன என்று தெரியவில்லை. சினிமாவில் இருந்தால் அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அழகாக இருக்கும் நபர்களுக்கு தான் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் தற்போது நான் நடிகையாகி இருக்கிறேன் என்று பேசியுள்ளார்.

வருகிற ஜூலை 15ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சாய் பல்லவியிடம், ‘தளபதி விஜய்யுடன் எப்போது நடிப்பீர்களா’ என்று கேள்வி கேட்டகப்பட்டது. இதற்கு பதிலளித்த சாய் பல்லவி ‘ நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் கண்டிப்பாக தளபதியுடன் படம் பண்ணுவேன் ‘ என்று கூறியுள்ளார். விரைவில் இவர்கள் இருவரின் கூட்டணியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *