இதன் மூலம் நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பேன்…! பேராண்மை பட நடிகை கூறிய சீக்ரெட்…!

பேராண்மை திரைப்படத்தில் அஜிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சரண்யா நாக். தற்பொழுது உடல் எடை கூடி உண்டாகி ஆள அடையாளம் தெரியாமல் இருக்கும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவருடைய ஹேண்ட் பேக் இருக்கக்கூடிய வழக்கமான விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் தன்னுடைய மேக்கப் சாதனங்கள் மற்றும் தனக்கு தேவையான பொருட்களை வைத்திருந்த அவர் அட்டை போன்ற சில அமைப்புகளை தன்னுடைய பையில் வைத்திருந்தார்.

இது என்ன என்று தொகுப்பாளர் கேட்ட பொழுது. இது இருந்தால் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம். பொது இடங்களுக்கு செல்லும் பொழுது அங்கே சுத்தம் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.அந்த இடத்தில் அமர்ந்தபடி சிறுநீர் கழிப்பதால் பல நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. அந்த நேரத்தில் இது இருந்தால் நின்றபடியே சிறுநீர் கழித்து விட்டு அந்த அட்டையை அங்கிருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்துவிடலாம்.

இது எப்போதுமே என்னுடைய ஹேண்ட் பேக்கில் இருக்கக்கூடிய ஒரு விஷயம் என பேசி இருக்கிறார் நடிகை சரண்யா நாக். இதன் மூலம் பெண்கள் இப்படியான விஷயங்களை தங்களுடைய கைப்பையில் வைத்துக் கொள்வதன் மூலம் சுகாதாரமற்ற பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் நிலை வரும் பொழுது சுகாதாரமான முறையில் சிறுநீர் கழித்து விட்டு வரலாம் என்ற ஆலோசனை கொடுத்திருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *