அவரை அந்த இடத்தில் புடிச்சு கிள்ளணும் போல இருந்துச்சு…! கூச்சமின்றி கூறிய நடிகை தமிழ்செல்வி…!

பிரபல நடிகை தமிழ்செல்வி தமிழில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஒருவராக அறியப்படுகிறார். குறிப்பாக மௌனராகம் என்ற சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்லா வரவேற்பு பெற்று கொடுத்தது. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சமீபத்திய பேட்டி, ஒன்றில் கலந்து கொண்ட இவர் நடிகர் அஜித்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். வேதாளம் திரைப்படத்தில் நடித்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை தமிழ் செல்வி.

நடிகர் அஜித் படப்பிடிப்பு தளத்தில் சக பணியாளர்களுடன் தான் அமர்ந்திருப்பார். அவருக்கான தனி கேரவன் இருக்கிறது. ஏசி அறை இருக்கிறது. ஆனால் அங்கு செல்ல மாட்டார். சக பணியாளர்களுடன் அமர்ந்திருப்பார்.எவ்வளவு வியர்த்தாலும் சரி கொசு கடித்தாலும் சரி அங்கிருந்து நகர மாட்டார். அனைவருடனும் சேர்ந்து அமர்ந்திருப்பார். அமைதியாக அமர்ந்து கொண்டு செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருப்பார்.

ஒரு காட்சியில் நடிகர் அஜித்தை ஸ்ட்ரக்சரில் வைத்து இழுத்து வருவது போல ஒரு காட்சி அந்த காட்சியில் எனக்கு நேராக அவருடைய தலையை வைத்து இருந்தார்கள்.அந்த இடத்தில் அவருடைய முகத்தை க்ளோஸ் அப்பில் பார்த்ததும் அவருடைய கன்னத்தை பிடித்து கிள்ள வேண்டும் போல இருந்தது. இயக்குனரிடம் சார் கன்னத்தை புடிச்சு கிள்ளிக்கட்டுமா..? என்று கேட்டேன். கில்ளிக்கோங்க அவரு ஒன்னும் சொல்ல மாட்டாரு என்று கூறினார். ஆனால், நான் எதுவும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டேன் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை தமிழ்செல்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *