அது தான் தேவை…! வருங்கால கணவர் அப்படித்தான் இருக்கனும்…! மனம் திறந்த விஜய்சேதுபதி பட நடிகை…!

நடிகை தன்யா ரவிச்சந்திரன் பல தகவல்கள் குறித்து மனம் திறந்துள்ளார். நடிகை தன்யா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை தன்யா ரவிச்சந்திரன்.பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, பிருந்தாவனம் மற்றும் கருப்பன் ஆகிய படங்களில் நடித்துவிட்டு, அதன் பின் ஐந்து வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் நடிகை தன்யா ரவிச்சந்திரன்.இப்போது, உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் தன்யா. ஆனால், இந்த இளம் நடிகை தன்யா ரவிச்சந்திரன் ஆறு ஆண்டுகளில் நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி. விஜய் சேதுபதியுடன் கருப்பன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி படத்தில் இவரது நடிப்பு பாராட்டை பெற்றது.மாயோன், அகிலன் என படங்களில் திரைக்கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் பிறந்தது திருச்சி, வளர்ந்தது சென்னை தான். நான் ரொம்ப வெளியே போய் ஊர் சுத்த மாட்டேன்.வீட்ல இருக்குறது தான் பிடிக்கும். பிரண்ட்ஸ் வீட்டுக்கு போவேன். அவங்க என் வீட்டுக்கு வருவாங்க, அவ்வளவு தான். அப்புறம் நான் ரொம்ப ஸ்டிரைட் பார்வர்டு. இதுதான் நான். நானும், அம்மாவும் சுதை கேப்போம். அப்பாகிட்ட அட்வைஸ் கேப்பேன். எல்லோரோட கருத்தையும் கேப்பேன்.

ஆனா முடிவு நாள் தான் எடுப்பேன். ‘பி.பி.180’ படத்துல நடிக்கிறேன். இது ஹீரோயின் ரோலுக்கு முக்கியத்துவம் கொடுக்குற படம். இன்னொரு தமிழ் படத்துல நடிக்கவும் அக்ரிமெண்ட் சைன் பண்ணிருக்கேன். 2 படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை போய்க் கிட்டு இருக்கு. காதல் யாருக்குத்தான் பிடிக்காது. இப்போ அதற்கு நேரமும் இல்லை. வேண்டாம். கரம்பிடிக்க போகிறவர் எனக்கு உண்மையா இருக்கணும். பொய் சொல்றது பிடிக்காது. பின்னாடி பேசுறது பிடிக்காது. நேருக்கு நேர் எதையும் பேசும் ஆளா இருக்கணும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *