ஆண் நண்பருடன் தியேட்டருக்கு போய்…! பார்க்க கூடாததை பார்த்து பாதியில் ஓடி வந்த அபர்ணா தாஸ்…!

பிரபல இளம் நடிகை அபர்ணாதாஸ் ஆண் நண்பருடன் தியேட்டருக்கு சென்று அங்கே இருந்த மோசமான அனுபவத்தினால் பாதியிலேயே ஓடி வந்த சம்பவத்தை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். பேட்டியில் கலந்து கொண்ட நடிகை அபர்ணாதாஸ் இடம் ஒரு படத்திற்குச் சென்று இப்படி ஒரு மோசமான படத்தில் வந்து மாட்டிக் கொண்டோமே.. இதை இனிமேல் யார் பார்ப்பார்கள் என்று பாதியிலேயே எழுந்து வந்த சம்பவம் நடந்திருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அபர்ணாதாஸ் ஆம் என்று கூறினார். மட்டுமில்லாமல் அதன் பின்னால் இருந்த கதையையும் விளக்கினார். அவர் கூறியதாவது, நானும் என்னுடைய ஆண் நண்பரும் படம் பார்க்க சென்றோம். என்னுடைய பள்ளிக்கால ஆண் நண்பர். அந்த படம் என்ன படம் என்று நான் சொல்ல மாட்டேன். அந்த படத்தில் வரக்கூடிய காட்சிகளை ஆண் நண்பருடன் சேர்ந்து பார்க்கும் வகையில் இல்லை.அதனால் தொடர்ந்து பார்க்க வேண்டாம் என்று முடிவு எடுத்து இன்டர்வெல்லில்

தியேட்டரை விட்டு வெளியே வந்து விட்டேன் என கூறியிருக்கிறார். தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய நடிகை அபர்ணாதாஸ் நடிகர் கவினுடன் டாடா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்பொழுது சீக்ரெட் ஹோம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *