பாலிவுட் நடிகை மிருணாள் தாகூருக்கு அறிமுகம் தேவையில்லை, அந்த தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலம் என்று சொல்லலாம்.சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை மிருணாள் தாகூர் தான் தற்போது கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் திரையுலகின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் முதல் சாய்ஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. சீதா ராமம் படத்தில் தனது அழகாலும் அசத்தல் நடிப்பாலும் இந்திய சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மிருணாள் தாகூர் தற்போது நானியின் 30வது படத்தில் நடித்து வருகிறார். மேலும், பாலிவுட்டிலும் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், அதிரடியாக தனது சம்பளத்தை ஏற்றி விட்டார் மிருணாள் தாகூர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.மராத்தி நடிகையான மிருணாள் தாகூர் லவ் சோனியா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
ஆனால், கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் வெளியான சீதா ராமம் படத்தில் சீதாவாக நடித்த நிலையில் தான் அவருக்கு இந்தியளவில் ஏராளமான ரசிகர்கள் இமிடியேட்டாக கிடைத்தனர். அதில், பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களே ரசிகர்களாக மாறியிருப்பது தான் மிருணாள் தாகூருக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட்டாக மாறி உள்ளது. கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தின் தென்னிந்திய இளைஞர்களை கவர்ந்துவிட்டார். சீதா ராமம் படத்தில் அடக்கவுடக்கமான பெண்ணாக நடித்து வந்த இவர் பாலிவுட்டில் கதையே வேறு.சமீபத்தில் ஆந்தாலஜி தொடரான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வில் படு கவர்ச்சியான ரோலில் நடித்திருந்தார்.
இந்நிலையில் லவ் சோனியா என்ற படத்தில் மிருணாள் தாகூர் வயதான நபருடன் உடலுறவு காட்சியில் நடித்துள்ளார்.அக்ஷய் குமாரின் செல்ஃபி படத்தில் ஒரே ஒரு ஐட்டம் சாங்குக்கு மிருணாள் தாகூர் டான்ஸ் ஆடியதற்கே 1 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது நானி படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் என்கின்றனர். ராஷ்மிகா, சமந்தாவை எல்லாம் இப்படி அதிரடியாக மிஞ்சி விட்டாரே என சினிமா வட்டாரத்தில் பலரும் ஷாக் ஆகி உள்ளனர். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மிருணாள் தாகூர் இப்படி மாறிவிட்டாரே என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.