விஜய் இப்படி பண்ணுவாரு-ன்னு சத்தியமா நெனச்சி பாக்கல…! பொங்கி எழுந்த கீர்த்தி சுரேஷ்…! வீடியோவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யுடன் பைரவா, சர்க்கார் என இரண்டு திரைப்படங்களில் அடுத்தடுத்து ஜோடி போட்டு நடித்தார். தமிழில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் தனுஷ் சூர்யா விக்ரம் விக்ரம் பிரபு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய் இப்படி செய்வார் .

என சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை என ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷிடம் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உங்களுடைய மகாநதி திரைப்படத்தில் உங்களுடைய நடிப்பு எப்படி இருந்தது என்று நடிகர் விஜய் மேடையிலேயே கூறியிருந்தார்.ஒரு மிகப்பெரிய நடிகர் உங்களைப் பற்றி கூறிய அந்த வார்த்தைகளை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை கீர்த்தி சுரேஷ், இதனை நான் நடிகர் விஜய்யிடம் இருந்து சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அதை அவர் பேசித்தான் ஆக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. பேசாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், அந்த படத்தை பார்த்துவிட்டு என்னுடைய நடிப்பை பாராட்டியது என்னால் நம்பவே முடியவில்லை. இப்போது கூட நடிகர் விஜய் என்னுடைய நடிப்பை பார்த்து பாராட்டிய அந்த சம்பவத்தை நாள் மறக்க முடியவில்லை என மகிழ்ச்சி பொங்க பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *