தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே மகேஸ்வரி. கணவரை பிரிந்து மகனுடன் தனியாக இருக்கும் மகேஸ்வரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றார்.விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்த நடிகை விஜே மகேஸ்வரி, தான் விவாகரத்து செய்ததற்கான காரணம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசி உள்ளார்.தொலைக்காட்சிகளில் பேவரைட் விஜே-வாக வலம் வந்தவர் மகேஸ்வரி. அசத்தப் போவது யாரு என்கிற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆன மகேஸ்வரி, திருமணத்துக்கு பின்னர் சில ஆண்டுகள் சின்னத்திரையை விட்டு விலகினார். இவருக்கு கேஷவ் என்கிற மகனும் உள்ளார். திருமணமான சில ஆண்டுகளிலேயே இவர் கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் மகேஸ்வரி, அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியும் வருகிறார். தற்போது தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் மகேஸ்வரி, விவாகரத்துக்கான காரணம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசி உள்ளார்.திருமணத்துக்கு பின்னர் கணவர் வீட்டில் தன்னை மிகவும் அடிமைப்படுத்தியதாக கூறியுள்ள மகேஸ்வரி, நண்பர்களுடன் பழகக்கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போட்டதாக தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆண்களுடன் நடிக்கக் கூடாது என கூறியதால் தான் சீரியலில் நடிப்பதையே நிறுத்திவிட்டதாக கூறியுள்ள மகேஸ்வரி, மீறி சீரியலில் நடிச்சா குடும்ப மானம் போய்விடும் என கணவர் வீட்டார் பல பிரச்சனைகளை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்தார். மகேஸ்வரி விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருப்பார்.அதற்கு நடிப்பதாக கேட்டு ஒரு கால் வந்ததாகவும் தன்னை ஃபிராங்க் செய்கிறார்கள் என்று கூறினேன். அம்மாவும் இதைத்தான் கூறினார்கள். அடுத்த நாள் மீண்டும் எனக்கு கால் வந்தது.விஜய் சேதுபதிக்கு மனைவியாக ஷிவானி, மைனா நந்தினி கமிட்டாகிவிட்டார்கள் நீங்கள் மூன்றாம் மனைவி என்று கூறினார்கள். 3வது மனைவியா 10வது மனைவி என்றால் கூட நான் ஓகே தான் என்று மகேஸ்வரி கூறியதாக பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.