மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு அஜித் இப்படியொரு உதவி செய்தாரா…! அவரே பேட்டியில் சொன்ன உண்மை…! அதை கேட்டு கண்கலங்கிய ரசிகர்கள் …!

‘நான் பணம் கட்ட பள்ளிக்கு போவேன், அஜித் அலுவலகத்திலிருந்து பணம் கட்டிவிட்டார்கள் என்று கூறுவார்கள். எப்படி அவருக்கு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை’ – மாரிமுத்து
உதவி இயக்குனராக, இயக்குனராக, நடிகராக வெள்ளித்திரை , சின்னத்திரை என அனைத்திலும் கலக்கிக்கொண்டிருக்கும் மாரிமுத்து, 90களில் உதவி இயக்குனராக இருந்த போது, நடிகர் அஜித் உடன் நிறைய படங்களில் பணியாற்றியவர். அவருடன் நெருங்கி பழகியவர். அப்போது அவருக்கும் அஜித்திற்கும் இருந்த நெருக்கத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ‘‘அஜித் எனக்கு ரொம்ப பெரிய உதவியை செய்தார். அவர் என் மீது ரொம்ப ப்ரியமா இருப்பாரு. இப்போ தான் தொடர்பு இல்லாமல் இருக்கிறது. கொஞ்சம் தூரமாயிடுச்சு. அடுத்த படம் அவருடன் தான் நடிக்கப் போகிறேன்.

அப்போது எல்லாத்தையும் அவருடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். ஆசை, வாலி சமயத்தில் அவருடன் பணியாற்றும் போது, ரொம்ப ப்ரியமா இருப்பாரு. என் பைக்கில் அவரை அழைத்துச் செல்வேன். அவரது பைக்கில் என்னை அழைத்துச் செல்வார். ரொம்ப சிம்பிளான ஆளு. ஆசை படப்பிடிப்பின் போது ஹெல்மெட் போட்டு பைக்கில் தான் படப்பிடிப்புக்கு வருவார். அந்த சமயத்தில் தான் என் மகன் பிறந்தான். அவன் வளரும் போது, அஜித்தோடு வாலி படம் பண்ணிட்டு இருந்தோம். என் மகனை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது என் ஆசை. பிரபல பள்ளி ஒன்றில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன்.

நல்லா படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த பள்ளியில் அப்போது அனுமதி கட்டணமாக குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும். என்னிடம் பணம் இல்லை. அஜித்திடம் அதை பகிர்ந்தேன். சினிமாத்துறையில் பலன் இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்தும் தற்போது சீரியல் மற்றும் படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து.எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து இந்தாம்மா ஏய் என்ற அவரது டயலாக் அனைவரையும் கவர்ந்திழுத்தது.

இன்று காலை டப்பிங் பணியில் இருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் மாரிமுத்து.அவரது மறைவுக்கு வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மறைவுக்கு முன் நடிகர் மாரிமுத்து அஜித் பற்றி பேசிய ஒரு விசயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்துடன் பல படங்களில் பணியாற்றி இருப்பதாகவும் அவருடன் நடந்த சம்பவத்தையும் பகிர்ந்து கொண்ட மாரிமுத்து, என் மகன் படிக்க கேட்காமலேயே பணம் கொடுத்து உதவினார் அஜித் என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *