செய்தி வாசிப்பாளராகவும் அழகுகலை நிபுணராகவும் அரசியல் விமர்சகராகவும் திகழ்ந்து வரும் பனிமலர் பன்னீர்செல்வம் பல வெளிப்படையாக கருத்துக்களை பகிர்ந்து வருபவர்.சமூக வலைத்தளங்களில் இருக்கும் பெரும்பாலானோர் ஆரோக்கியமான விவாதம் நடத்தாமல் அருவருப்பான வார்த்தைகள், புகைப்படங்கள், கமெண்ட்டுக்களை பதிவு செய்து சமூக வலைத்தளங்களையே கிட்டத்தட்ட சாக்கடையாக மாறிவிட்டனர். இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர் பனிமலர் என்பவருக்கு சில மர்ம நபர்கள் ஆண்களின் நிர்வாண படங்களை அனுப்பியுள்ளதால் அவர்களுக்கு பதிலடி கொடுத்து நெத்தியடி பதிவு ஒன்றை பனிமலர் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது. ஆண்கள் நிர்வாணப் படம் அனுப்புவதன் உளவியலை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதைப் பார்த்து மயங்கி உங்களிடம் பெண்கள் பேசுவார்கள் என நம்புகிறீர்கள் எனில் சாரி பிரதர்ஸ், எங்களுக்கு அருவருப்பைத் தவிர வேறொன்றும் ஏற்படப்போவதில்லை. அப்படி தன் கருத்திற்கு கடுமையான வார்த்தையில் சொல்லி திட்டிய நபர்களை கடுமையான சொற்களை கொண்டு பதிலடியும் கொடுத்து வருகிறார். அப்படி பாலியல் ரீதியாக துன்புறித்தியவர்களை எதிர்த்து பேசியிருக்கிறார்.
அரசியல் சார்ந்த கருத்திற்கு கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். அதை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் இப்படி தரைகுறைவாக பேசுவீர்களா. இப்படி பேசுவதற்கு உங்களிடம் அந்த உறுப்பு இருக்கிறது அதற்காக பேசுவீர்களா. ஏன் உங்களுக்கு மட்டுமா இருக்கிறது. நாய், பூனை, நரிகளுக்கும் இருக்கிறது. அவைகலுக்கு உங்கலுக்கும் என்ன வித்தியாசம், மூளை உங்களுக்கு கிடையாதா? மூளை இருந்தால் ஏன் இப்படி பேசப்போகிறீர்கள் என்றூ கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் பனிமலர் பன்னீர்செல்வம்.