தமிழ் சினிமாவில் 90 களில் கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கௌசல்யா. வெள்ளி திரையில் பலருக்கும் பரீட்சையமான கெளசல்யா பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சின்ன திரையில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் அவரைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் பல வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்த கௌசல்யா சுந்தரியை மிரட்டி அவருடைய திறமையை கொண்டு வரும் ஒரு கேரக்டராக அறிமுகம் ஆகி இருக்கிறார். எப்போதுமே சிரித்த முகமாக இருக்கும் நடிகை கௌசல்யா வெள்ளி திரையில் கதாநாயகியாக இருக்கும்போது இருந்த அதே அழகு அப்படியே மெயின்டனன்ஸ் பண்ணி கொண்டு இருக்கிறார்.
இவருக்கு மட்டும் வயது ஆகவில்லையா? என்று பார்ப்பவர்கள் கேட்கும் வகையில் தான் இவருடைய அழகு இப்பவும் குறையாமல் இருந்து வருகிறது. கௌசல்யாவின் சொந்த பெயர் அவருடைய வீட்டில் வைத்த பெயர் கவிதா தானாம். அவர் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் முதல் திரைப்படத்தில் இவர் நந்தினி என்று கேரக்டரில் நடித்ததால் இவரை நந்தினி என்றுதான் அழைத்து வருகிறார்களாம். விஜய், கார்த்தி, பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கௌசல்யா, நான் திருமணத்தை எதிர்ப்பவள் இல்லை, என்னுடைய கருத்துக்கு ஏற்ப பிடித்தமான
ஒருவரை இன்னும் நான் சந்திக்கவில்லை. ஒருவர் மட்டும் என் வாழ்க்கையில் வந்தார். ஆனால் சில காரணங்களால் பிரேக் அப் ஆகிவிட்டது. படங்களில் பிஸியாக நடித்து வந்த சமயத்தில் நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டது. இதனால் நிறைய மாத்திரைகளை சாப்பிட்டதால் திடீரென உடல் எடை அதிகம் ஆகிவிட்டது. இந்த விஷயத்தால் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. எனக்கு விஜய்யுடன் சேர்ந்து நடித்த பிரியமுடன் எனக்கு மிகவும் பிடித்த படம். விஜய் தான் என்னுடைய க்ரஷ் என்று கௌசல்யா கூறியுள்ளார்.