குழந்தையின்மையால் கசந்துப் போன வாழ்க்கை…! 11 ஆண்டுகளில் முறிந்துப் போன ரேவதியின் காதல்…! சோகத்தில் ரசிகர்கள் …!

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி. இவர் மண் வாசனை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அப்போதைய காலக்கட்டத்தில் உச்சியில் இருந்தார்.இவரது நளினத்திற்கும் சிரிப்பிற்குமே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. மேலும், அப்போதைய காலத்தில் இருந்த பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்திருக்கிறார்.ஒளிப்பதிவாளர், இயக்குனர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட சுரேஷ் சந்திர மேனனை, படப்பிடிப்பு ஒன்றில் சந்தித்த ரேவதிக்கு, அவர் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் காதல் பரிமாறி, அது திருமணமாகவும் மாறியது.1986 ம் ஆண்டு இவர்களில் காதல், கல்யாணம் என்கிற கட்டத்திற்கு நகர்ந்தது.

சுரேஷ் மேனன்-ரேவதி இணைந்து சினிமா தொழிலில் நிறைய பங்களிப்பை தந்தனர். நிறைய நஷ்டம், சிரமம், அதிலிருந்து மீண்டது என அவர்களின் முயற்சி கடுமையானது. சிரமங்களில் அவர்களின் காதல் தான் அவர்களை காப்பாற்றி வந்தது. 1993ம் ஆண்டில் வெளியான புதிய முகம் படத்தில், ரேவதி-சுரேஷ் மேனன் இருவரும் இணைந்து நடித்தனர். சுரேஷ் அந்த படத்தை இயக்கினார். நன்றாக போன அவர்களின் வாழ்க்கையில் குழந்தையின்மை பெரிய பிரச்னையாக வெடித்தது எனக் கூறப்படுகிறது. தற்போது இவர் பெரியளவில் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் அண்மையில் ஜோதிகாவுடன் ஜாக்பாட் திரைப்படத்தில் நடித்து நம்மை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.

நடிகை ரேவதி புதிய முகம் திரைப்படத்தில் நடித்த சுரேஷ் மேனனை காதலித்து வந்தார். பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்த வேளையில், குழந்தையின்மை பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்தது.இதனால் 2013ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர். கணவரை விவாகரத்து செய்தப் பின் செயற்கை முறையில் குழந்தைப் பெற்றுக் கொண்டார் நடிகை ரேவதி. பல காலமாக வெளியில் குழந்தையை வெளியில் காட்டாமல் இருந்த அவர் தனது 48வது பிறந்தநாளில் குழந்தையை அறிமுகம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *