ஒரு நாளைக்கு ரூபாய் 40,000 சம்பளம்…! அட்ஜஸ்ட்மென்ட் அனுபவம் பற்றி கார்த்தி அக்கா பகிர் பேட்டி…!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜீவிதா. இவர் கடந்த 2018 -ம் ஆண்டு வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜீவிதா. முதன் முதலாக மனதில் உறுதி வேண்டும் என்னும் சீரியல் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு பல பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஏற்ற மாதிரியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர். சீரியல்களில் மட்டுமல்லாமல் சினிமாக்களிலும் கூட கவனம் செலுத்தி வருகிறார்.

கடைக்குட்டி சிங்கம் படத்தில் இவர் நடிப்பு வெகுவாக பாரட்டப்பட்டது. ஜீவிதா நேர்காணல் ஒன்றில் மீடியாவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார். அதில் “ மீடியாவில் இருக்கும் ஒரு ஜுனியர் ஆர்டிஸ்டை அட்ஜெஸ்ட் செய்ய சொல்கிறார்கள் அல்லவா. அதே போலதான் சொல்லுவாங்க. அவங்க கொஞ்சம் லோ-லெவல், நாம கொஞ்சம் ஹை-லெவல் அவ்வளவுதான் வித்தியாசம்.அட்ஜெஸ்மெண்ட் ஒன்னுதான். அவங்க பெண்கள் என்றாலே இதற்கு மட்டும்தான்னு நினைப்பாங்களா என்னென்னு தெரியலை.பொண்டாட்டி பிள்ளைகள் இருப்பாங்களானு தெரியல.

அம்மாதானே அவங்களையும் பெற்றார்கள் . இன்னும் பச்சையா சொல்லிடுவேன். மீடியாவுல இருக்குறதால நான் அமைதியா இருக்கேன். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜீவிதா சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில் , ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போது ஒரு நாளைக்கு மட்டும் ரூபாய் 40,000 சம்பளம் பேசப்பட்டது. ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அதுக்கு நான் நோ சொல்லிவிட்டேன். அதன்பிறகு ஒரு நாளைக்கு நடிப்பதற்கு மட்டும் சம்பளம் 10,000 என சொன்னார்கள் என்று ஜீவிதா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *