போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வரலட்சுமி சரத்குமார்…! பரபரப்பு தகவல்…!அதை கேட்டு திரைப்பிரபலங்கள் பெரும் அதிர்ச்சி …!

போதைப் பொருள் மற்றும் ஆயுத கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமி ஆஜராக வேண்டும் என தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பி இருக்கிறது. சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நடிகைகள் சிக்கி வரும் நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் சிக்கி இருக்கிறார் நடிகை வரலட்சுமி. இந்த விவகாரத்தில் சிக்குவதற்கு முக்கியமான காரணமாக இருப்பது நடிகை வரலட்சுமியின் உதவியாளரான ஆதிலிங்கம் என்பவர்தான்.நடிகை வரலட்சுமி உதவியாளர் ஆதிலிங்கம் என் ஐ ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து ஆதிலிங்கம் கொடுத்த தகவலின் பெயரில்

நடிகை வரலட்சுமி நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு NIA அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. கேரள மாநிலம் கடற்கரை பகுதி ஒன்றில் 300 கிலோ போதை பொருட்கள் மற்றும் அதிநவீன துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கடத்திய வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.ஏற்கனவே இலங்கை தமிழர்கள் 13 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் 14-வது நபராக ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் நடிகை வரலட்சுமியின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போதை பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பிரமுகராக இருந்த குணசேகரன் என்பவர் உடன் ஆதி லிங்கம் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்திருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது. ஆதிலிங்கம் செய்த முதலீடுகள் மற்றும் அவருடைய செயல்பாடுகள் குறித்து தகவல்களை திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமியை NIA அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *