சினிமா நடிகைகளுக்கு சினிமாவில் மட்டும் இல்லாமல் போகும் இடம் எல்லாம் பாலியல் சீண்டல்களை சந்திக்க நேரிடும். அப்படி தனக்கு நடந்த ஒரு கொடுமை பற்றிய உண்மையை சீரியல் நடிகை சந்தியா ஓப்பனாக பேசியிருக்கிறார். வம்சம் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சந்தியா ஜாகர்லமுடி. சந்திரலேகா போன்ற சீரியல்களில் நடித்து வந்த சந்தியா, தற்போது சின்னத்திரையில் இருந்துவிலகி தெருநாய்களை பாதுகாத்து வரும் பணியை செய்தும் வருகிறார்.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், 2006ல் ஒரு சீரியலின் அறிமுகபாடல் காட்சியை கும்பகோண கோயிலில் படமாக்கினோம். அப்போது யானையுடன் நடத்தபோது திடிரென என்னை யானை தாக்கியது.
யானை மீது எனக்கு இதுவரை கோபம் எனக்கில்லை என்றும் என்னை தும்பிக்கையால் தான் தாக்கியது, அது எனக்கு காலில் மிதித்தது போல் இருந்ததாகவும் சந்தியா தெரிவித்துள்ளார். மேலும், அதனால் என் உடம்பில் 7 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சில பாகங்களை அகற்றவும் நேர்ந்தது. ஆனால் யானை என்னை தாக்கிய போது மயத்தில் நான் இருந்த போது என்னை சிலர் மீட்டு மருத்துவமனைக்கு நடனக்கலைஞர்கள் தூக்கி சென்றனர். அப்போது வலியால் துடித்திக்கொண்டிருந்த
என்னை பிணம் போல் இருந்த என்னை டான்சரில் ஒருவர் என் மார்பில் கைவைத்து சுகம் கண்டான் என்று வெளிப்படையாக கூறி அழுதுள்ளார். பிணம் போல் இருந்த என் மார்பில் கைவைத்தவர் உயார் என்று தெரியவில்லை, அப்போது கூடவா அதை செய்வார்கள் என்று கூறியிருக்கிறார். இதை என் அம்மாவிடம் கூட கூறியதில்லை அதிலிருந்து மீண்டு வர நீண்டநாட்கள் ஆனதாக கண்கலங்கி கூறியிருக்கிறார் நடிகை சந்தியா.