நடிகை பிரியங்கா சோப்ரா பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது உலக அளவில் பாப்புலரான பிரபலமாக இருக்கும் பிரியங்கா சோப்ராவின் ஒரு போட்டோ வந்தால் கூட அது இணையத்தில் வைரல் ஆகி விடுகிறது. சமீபத்தில் பிரியங்கா – நிக் ஜோடி வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டனர். ஆனால் குழந்தை பற்றிய எந்த விவரங்களையும் வெளியிடாமல் இருக்கின்றனர். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா நேற்று லாஸ் ஏஞ்சல்ஸில் ஷாப்பிங்கிற்காக வெளியில் வந்திருக்கிறார். அந்த போட்டோவை ஒரு பத்திரிகையாளர் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
அது தற்போது வைரல் ஆகி வருகிறது. பிரியங்கா சற்று குண்டாகி இருப்பதை சில விமர்சித்து வருகின்றனர். வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தைகள் எங்கே எனவும் சிலர் கேள்வி கேட்டிருக்கின்றனர். வாடகை தாய் மூலம் பெற்றாலும் பிரியங்காவும் தற்போது அம்மாவாக தான் வாழ்ந்து வருகிறார். அதனால் தான் இந்த மாற்றம் என பிரியங்காவுக்கு ஆதரவாகவும் நெட்டிசன்கள் சிலர் பேசி வருகின்றனர். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாகவும் ஹாலிவுட் படங்களில் நடித்து
கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்று இந்தி சினிமாவில் அறிமுகமாகினார். நடிகர் விஜய்யின் தமிழன் படத்தில் அறிமுகமாகினார். இதையடுத்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தாம பாலிவுட் ஹாலிவுட் என ஹிட் கொடுக்கும் முன்னணி நடிகையாக களம் கண்டு வருகிறார். சமீபத்தில் அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்து அங்கும் இங்குமாக செட்டிலாகி வருகிறார்.
கிடைக்கும் நேரத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பயணம் செய்து வரும் பிரியங்கா சமீபத்தில் கடறகரை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது பிரியங்கா சோப்ராவின் கணவருடன் முகம் சுழிக்க வைக்கும் படியாக கணவர் செய்த செயலை புகைப்படத்தோடு இணையத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். ரசிகர்கள் இதை பார்த்து கண்டபடி வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.