நடிப்புக்கு பிரேக்…! அட்வான்ஸை திருப்பிக் கொடுத்த சமந்தா…! அதற்கு என்ன காரணம் என்று தெரியுமா …? அது தெறிச்ச நிங்களே ஷாக்காயிடுவிங்க …!

குஷி படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிப்பதில் இருந்து ஒரு வருடம் சமந்தா பிரேக் எடுக்கப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவர் சமந்தா. தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நங்கூரமாய் இடம் பிடித்தார் சமந்தா இவருக்கும் தெலுங்கு பட உலகத்தின் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தானியாவிற்கும் 2017 திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை தொடர்ந்த சமந்தா தமிழ் தெலுங்கு என பட்டையை கிளப்ப தொடங்கினார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்லறீயா மாமா” பாடலில் ஒட்டுமொத்த க்ளாமரையும் இறக்கி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்தார் சமந்தா.

சுமூகமாக சென்ற இந்த காதல் ஜோடியின் வாழ்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தா நாக சைதன்யா 2022 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதனை தொடர்ந்து அந்த ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாகவே சமந்தாவிற்கு அமைந்தது. ஜிம் ஒர்கவுட்டில் மரண மாஸ் காட்ட தொடங்கிய சமந்தா மயோசிட்டிஸ் என்ற தசை நோயால் பாதிக்கப்பட்டார். சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளால் அவர் மனதளவிலும் சோர்ந்திருந்தார். இதனால் விஜய் தேவர்கொண்டா உடன் சமந்தா நடித்து வந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சிகிச்சைகளுக்கு பிறகு கம் பேக் கொடுத்த சமந்தா படப்பிடிப்பை தொடங்கினார்.

வருண் தவானுடன் சிட்டாடெல் வெப் சீரீஸிலும் நடித்து முடித்தார். குஷி படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிப்பதில் இருந்து ஒரு வருடம் சமந்தா பிரேக் எடுக்கப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி, அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை. இந்நிலையில் அவர் ஏற்கெனவே மூன்று, நான்கு படங்களில் ஒப்பந்தமாகி,

அதில் நடிப்பதற்காக முன்பணம் வாங்கியிருந்தார். இப்போது அவர் அந்தத் தொகையைத் திருப்பிக் கொடுத்துள்ளார். பொதுவாக வாங்கும் முன்பணத்தை நடிகர், நடிகைகள் திருப்பிக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், முன்பணத்தைக் கேட்கவில்லை என்றாலும் சமந்தா திருப்பிக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே தற்போது தியானம், ஆன்மீகம் என பயணிக்கத் தொடங்கியுள்ளார் சமந்தா. சில தினங்களுக்கு முன்பு கோவை ஈஷா மையத்தில் எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்திருந்தார் சமந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *