அட 3 நிமிஷத்துக்கு 3 கோடியா…! வேறு வழியில்லாமல் பிரபல நடிகையை புக் செய்த தயாரிப்பாளர்…!

நடிகை ஊர்வசி ரவுத்தேலா இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. மாடல் அழகி என்பதால் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் காட்டு காட்டுன்னு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடிப்பது மற்றும் வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் இளசுகளை தட்டி தூக்குகின்றன இதனாலேயே அவர் சினிமா உலகில் கவர்ச்சி ராணியாக பார்க்கப்படுகிறார். இந்தி படத்தின் மூலம் அறிமுகமாகி பின் கன்னடம், பெங்காலி, தெலுங்கு தற்போது தமிழிலும்

இவர் அடி எடுத்து வைத்து உள்ளதால் இவர் காண மார்க்கெட் தற்போது அதிகரித்துள்ளது. திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையான ஊர்வசி தற்போது ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அவ்பொழுது பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார். சமீபத்தில் தமிழில் லெஜெண்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் தோல்வியானதால் தமிழில் அடுத்த வாய்ப்பை இழந்து பாலிவுட் பக்கமே சென்றுவிட்டார். படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு வரும்

ஊர்வசி ரவுத்தேலாவிடம் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் ஒரு படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாட கேட்டுள்ளனர். அதாவது அப்பாடல் வெறும் 3 நிமிடம் தான் இருப்பதால் அவர் 3 நிமிடம் மட்டும் ஆட வேண்டும். ஆனால் ஊர்வசி ஒரு நிமிடத்திற்கு 1 கோடி என்று 3 நிமிடத்திற்கு மூன்று கோடி சம்பளமாக கேட்டிருக்கிறாராம். இந்தியாவிலேயே ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி என்று பெறும் முதல் நடிகை ஊர்வசி தானாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *