இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி முகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பாய்ஸ். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிலியா டிசோசா. இப்படத்தினை தொடர்ந்து தமிழில், சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் 2012ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் ரெஸ்முகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கதாநாயகியாக
நடிப்பதை நிருத்திவிட்டு கேமியோ ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு விருது விழாவின் போது ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா கலந்து கொண்டனர். அப்போது ரித்தேஷ் மனைவி ஜெனிலியா முன்பே, வேறொரு நடிகைப்ரீத்தி ஜிந்தாவின் கையை பிடித்ததோடு கையில் முத்தம் கொடுத்து கொஞ்சியிருக்கிறார். இதனை பார்த்த ஜெனிலியா கடுமையாக அப்செட்டாகிய வீடியோ
இணையத்தில் பகிர்ந்து வைரலானது. தற்போது அதற்கு பழிவாங்க கணவர் ரித்தேஷ் பின்னால் இருக்கும் போது ஜெனிலியா ஆண் நண்பருடன் சிரித்து பேசியபடி இருந்துள்ளார். இதை பார்த்த ரித்தேஷ் கடுமாக கோபப்பட்டு ஜெனிலியா கைகை இழுத்து கூப்பிட்டு செல்கிறார். பழிவாங்க இப்படியா செய்வது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.