10 வருஷம் சினிமாவில் தலைகாட்டாமல் வெளிநாட்டில் செட்டிலாகிய பிரபல நடிகை…! வாய்ப்பு கொடுத்து மாற்றிய சிவகார்த்திகேயன்…!

80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சரிதா. முன்னணி நடிகர்களின் படங்களில் 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரிதா இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சரிதா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில்தான் மேலும் இவர் 2 முறை திருமணம் செய்துகொண்டார் இவர் முதலில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் சுப்பையா என்பவரை கடந்த 1975 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் இவர்கள் இருவரும் ஒரே ஆண்டில் பிரிந்துவிட்டார்கள் பின்னர் 1988ம் ஆண்டு மலையாள நடிகர் முகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு சிரவன் மற்றும் தேஜாஸ் என்ற 2 மகன்களும் பிறந்தார்கள். பின்னர் 2011ம் ஆண்டு தனது இரண்டாவது கணவர் முகேஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். விவாகரத்துக்கு பின்னர் தனது மகன் ஷ்ரவனுடன் துபாயில் வசித்து வந்தார்.

வாய்ப்பு கொடுத்து மாற்றிய சிவகார்த்திகேயன் தற்போது 10 ஆண்டுகள் கழித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள மாவீரன் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை சரிதா. கருப்பு அழகி என்று அந்தகாலக்கட்டத்தில் புகழப்பட்டு தற்போது ரீஎண்ட்ரி கொடுத்திருப்பது அனைவருக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *