தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் மிஷ்கின், நடிகை பாவனா உடன் அந்தரங்க உறவு வைத்திருந்ததாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த மிஷ்கின், தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆக உள்ள நிலையில், இன்னும் இப்படத்தின் ரிலீஸ் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் உள்ளது.
பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பிசாசு 2 திரைப்படத்தின் ரிலீஸ் தாமதம் ஆனதால், திடீரென வில்லன் நடிகராக களமிறங்கிய மிஷ்கின், மடோன் அஸ்வின் இயக்கியுள்ள மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகவும், லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.
இதுதவிர டெவில் என்கிற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் மிஷ்கின். இப்படி நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்துகொண்டிருக்கும் மிஷ்கின் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டபோது நடிகை பாவனா குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தற்போது இணையத்தில் பேசுபொருள் ஆகி வருகின்றது.
அந்த வகையில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முதல்படமான சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் நடிகை பாவனா தான் நாயகியாக நடித்திருந்தார். அப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் இயக்குனர் மிஷ்கின் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டு, அங்கு மாணவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தாராம். அப்போது மாணவர் ஒருவர் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் நீங்கள் எந்த விஷயத்திற்கு சந்தோஷம் அடைந்தீர்கள் என கேட்டாராம்.
இதற்கு செக்ஸ் வித் பாவனா என பதிலளித்தாராம். அதாவது பாவனா உடன் அந்தரங்க உறவின் இருந்தது தான் தனக்கு சந்தோஷம் அளித்ததாக மிஷ்கின் சொன்னதை கேட்டு அங்கிருந்தவர் ஷாக் ஆகிப் போனார்களாம். மிஷ்கின் பல ஆண்டுகளுக்கு முன் நடிகை பாவனா குறித்து தெரிவித்த இந்த சர்ச்சை கருத்து தற்போது மீண்டும் காட்டுத்தீ போல் பரவி வைரலாகி வருகிறது.