மயக்குறியே.. சிரிக்கிறியே..! பாவாடை தாவணியில் கிறங்கடிக்கும் ஜான்வி கபூர்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நடிகை ஜான்வி கபூர், பாவாடை தாவணியில் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். மறைந்த ஸ்டார் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகையாக வலம் வருகிறார்.ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், தற்போது தென்னிந்திய சினிமாவில் கால்பதித்துள்ளார்.இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த ஜான்வி, என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவாரா’ என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

தெலுங்கில் என்ட்ரி கொடுத்த முதல் படத்திலேயே கிளாமர் காட்டி நடித்து ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டத்தையும் ஏங்கவைத்துள்ளார்.தேவாரா படத்தின் Chuttamalle பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் செம வைரலானது. படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்னரே Chuttamalle பாடல் செம ட்ரெண்டிக்காக வலம் வந்த படத்திற்கு வேற லெவல் ப்ரோமோஷனாக அமைந்தது.

பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் வரும் 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது. தேவாரா படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தென்னிந்திய படங்களில் ஜான்வி நடித்து வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் ரசிகர்களை சிலிர்க்கவைத்துள்ளது. பாவாடை தாவணியில் நச்சுனு போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *