பொய்யா வாழ்ந்துவிட்டேன்…!ஹேமா கமிட்டி குறித்து வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை நளினி…! டி ராஜேந்தர் குறித்து என்ன சொன்னார் தெரியுமா…?

90 காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நளினி. இவர் விஜயகாந்த், சத்யராஜ், மோகன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர்.மலையாள திரையுலகைத் தாண்டி தமிழ் சினிமா உலகைக்கூட ஹேமா கமிஷன் அறிக்கை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்த அறிக்கை ஏற்படுத்திய விழிப்புணர்வுக்குப் பிறகு நிறைய நடிகைகள் தங்களின் கடந்தகால துயர சம்பவத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேச முன்வந்துள்ளனர்.இந்நிலையில் நளினி, ஹேமா கமிட்டி அறிக்கை பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை. சிவாஜி, மோகன், விஜயகாந்த், சத்யராஜ் எனப் பலருடன் சேர்ந்து நடித்தவர். 1980களுக்குப் பின்னால் ராமராஜனை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் 2000 இல் விவாகரத்து பெற்றார். அப்போது அது மிகப்பெரிய செய்தியாக இருந்தது. நடிகைகளில் ஒருவராக இருந்த நளினி தற்போது நிறைய சீரியல்களில் காமெடி ரோலிலும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஒரு பேட்டியில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ஒருவர் நம்மிடம் எந்த எண்ணத்தில் பழகுகிறார் என்பதை அவர்கள் கண்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ஒரு பெண்ணை அவரின் விருப்பம் இல்லாமல் யாராலும் தொட்டுவிட முடியாது. நான் முன்னணி நடிகையாக இருந்த நேரத்தில் இதுபோன்று பெண்களுக்கு எதிராக எந்த செயலும் நடந்தது இல்லை. அதற்கு முக்கிய காரணம் டி ராஜேந்தர் போன்று சிறந்த மனிதர் இருந்தது தான், அவர் மூச்சுக்காற்று கூட நடிகைகளின் மீது படாது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *