பிரியங்காவின் முகத்திரையை கிழித்த ஆடியோ…! இனி சர்ச்சைக்கு முற்றுபுள்ளியா…?

பிரியங்கா – மணிமேகலை பிரச்சினையின் முக்கிய ஆதாரம் வெளியாகியுள்ளது. மணிமேகலை- பிரியங்கா விவகாரம் பிரபல தொலைக்காட்சியில் மிக பிரபலமாக செல்லும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய 4 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது தன்னுடைய 5 ஆவது சீசனில் கடைசி கட்டத்தில் சென்றுக்கொண்டிருக்கின்றது.அந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளர் – மணிமேகலைக்கும், குக் – பிரியங்காவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தொகுப்பாளர்- மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார்.

இதற்கான காரணத்தை அவரது யூடியூப் சேனலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதனை கேட்ட மீடியா பிரபலங்கள் மணிமேகலைக்கு சார்பான கருத்துக்களை அவர்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.இந்த நிலையில், பிரியங்கா- மணிமேகலை சம்பவ தினத்தில் குக் வித் கோமாளி செட்டில் பேசிக் கொண்ட ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் பிரியங்கா, மணிமேகலையிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளார்.

அத்துடன் அவரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விடாமல் இடையில் கத்தி கத்திக் தொந்தரவு செய்துள்ளார்.இதனால் கடுப்பான மணிமேகலை, “ சும்மா சும்மா கத்த வேணாம். ஏ வேலைய பார்க்க விடுங்கள்.. முடிந்ததும் பேசுங்கள்…” என கேட்டுக் கொண்டுள்ளார். மணிமேகலை இப்படி கூறிய பின்னரும் பிரியங்கா, “ நீ எப்படி வேல பார்க்கிறன்னு நானும் பார்க்கிறேன்..” என திமிராக பதில் கொடுத்துள்ளார். இந்த ஆடியோ நெட்டிசன்களை கடுப்பாக்கியுள்ளதுடன் பிரியங்கா மீதுள்ள விமர்சனம் அதிகமாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *