ஜிவி பிரகாஷ்- சைந்தவி பிரிவிற்கு இது தான் காரணமாம்…! உண்மையை உடைத்த மாமியார்…!

ஜிவி பிரகாஷ்குமார்n – சைந்தவி தம்பதிகளின் விவாகரத்து முடிவு பற்றி அவரது தாயார் ஏ.ஆர்.ரெஹானா மனந்திறந்து பேசியிருக்கிறார்.கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் இவரின் சினிமா வாழ்க்கை அத்தோடு ஆரம்பித்தது. இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை பெற்றோர்கள் சம்பதத்துடன்

கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தையொன்று இருக்கின்றது.இந்த நிலையில் சமிபத்தில் GV பிரகாஷ்- சைந்தவி இருவரும் தனித்து வாழப்போவதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர். இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து கடந்த 11 வருடங்களாக திருமண வாழ்க்கையில் இருந்த இருவருக்கும் என்ன நடந்தது? என சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு எழுந்தது.

அந்த வரிசையில், ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதிகளின் விவாகரத்து குறித்து ஜி.வி.பிரகாஷ் தாயார் மனந்திறந்து பேசியுள்ளார். அதில், “சூழ்நிலை சிலருக்கு அப்படி அமைந்து விடுகிறது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?..” என்ற கேள்வியுடன் உரையை முடித்து கொண்டார். தற்போது தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள ஜி.வி.பிரகாஷின் சினிமா பயணத்திற்கு இது ஒரு தடையாக இருந்ததா? என அவரது ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *