அழகிய சேலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய ராயன் பட நடிகை…! குவியும் லைக்குகள்…!

நடிகை அபர்ணா பாலமுரளி அசத்தல் சேலையில் ஓணம் பண்டிகை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அபர்ணா பாலமுரளி 2016-ஆம் ஆண்டு மகேசிண்ட பிரதிகாரம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் கால்பதித்தவர் தான் அபர்ணா பாலமுரளி.நடிகையாக மட்டுமன்றி மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும் கலக்கிவரும் இவர்,2017 ஆம் ஆண்டு இவர் சண்டே ஹாலிடே என்ற திரைப்படத்தில் அனு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகரான சூர்யாவுடன் இணைந்து சூரரைப் போற்று படத்தில் நடித்து. தமிழ் ரசிகள் மனதில் இடம்பிடித்தார். இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரத்துக்காக தேசிய விருதையும் பெற்றார்.இதனை தொடர்ந்து நிறைய படங்கள் நடித்துள்ள இவர் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.அதில் இடம்பெற்ற மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா..

என்ற பாடல் தற்போது சமூக வளைத்தளங்களில் ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பித்துவிட்டது. அதனால் இப்போது ரசிகர்களிடம் அதிகம் பேசப்படும் நடிகையா அபர்ணா பாலமுரளி மாறியிருக்கின்றார்.இந்நிலையில் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து அழகிய சேலையில் இவர் தனது சமூக வளைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *