சிதைந்து போன வாழ்க்கை…! ஆர்த்தி வெளியிட்ட பதிவில் உண்மை இருக்கிறதா…? குழப்பத்தில் ரசிகர்கள்…!

ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்திற்காக காரணம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணம் முடிந்து சுமாராக 14 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆர்த்தி, தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் குடும்பமாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகின்றது. இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 9 ஆம் திகதி ஜெயம் ரவி தன் மனைவியைப் பிரிவதாக அறிக்கை வெளியிட்டார்.இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி, “ ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிவிப்பிற்கு எனக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. மாறாக நான் என்னுடைய மகன்கள் குறித்து தான் மிகுந்த கவலையடைகிறேன். விவாகரத்து செய்தி வெளியான பின்னர் ரவியிடம் பேச முயன்றேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்ப்பட்டிருந்தது என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் முதலில் தனது இன்டாகிராம் பக்கத்தில் இருந்து ரவியுடன் இருந்த புனைப்படங்களை நீக்கியது ஆர்த்தி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது விவாகரத்து முடியை தன்னிச்சையாக ஜெயம் ரவி மாத்திரம் எடுத்திருப்பதாக ஆர்த்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உண்மை இருக்கின்றதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. இன்னொரு தரப்பு ஆர்த்தி சட்டரீதியாக ஜெயம் ரவியை சிக்க வைக்க முயற்சிப்பதாகவும் கமெண்டுட்களை பதிவு செய்து வருகின்றனர். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *