விஜய்யை பார்த்தால் எரிச்சலாக வருகிறது – இப்படியா பண்றது… எரிச்சலாகுது – பட விழாவில் நடிகர் விஜய்யை திட்டி பகீர் கிளப்பிய கங்கை அமரன்..!!

நடிகர் விஜய்யை பார்த்தால் எரிச்சலாக வருவதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெஜ்டேவும், வில்லனாக இயக்குநர் செல்வராகவனும் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து பாடல் கடந்த மாதம் வெளியாகி 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்தது. இந்நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது விஜய் தனது அப்பா, அம்மாவை தள்ளி வைத்தது வேதனையாக இருந்தது. நாங்களெல்லாம் அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரின் நாடகத்திற்கு வாசித்தவர்கள். எனக்கு ஒன்றும் பயமில்லை.

எஸ்.ஏ.சந்திர சேகரின் நாடகத்திற்கு வாசித்த போது விஜய் குழந்தை. அப்போதெல்லாம் நாங்கள் அவரை கொஞ்சிவிட்டு போவோம். அவர்கள் விஜய்யை எப்படி வளர்த்தார்கள் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்துள்ளோம். அதனால் அந்த செய்தியை கேட்டதும் அவ்வளவு எரிச்சலாக இருந்தது. எனவே அவரது ரசிகர்கள் விஜய்யிடம் எடுத்துச் சொல்லுங்கள் என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *