சினிமா ஹீரோயினை காதலித்து கரம்பிடித்த விஜய் டிவி சீரியல் ஹீரோ பிரேம் …! வைரலாகும் வெட்டிங் புகைப்படங்கள்…!

விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள நீ நான் காதல் சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் பிரேம் ஜேக்கப் சினிமா ஹீரோயினை காதலித்து கரம்பிடித்துள்ளார்.சினிமாவில் ஜோடியாக நடித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகள் ஏராளம். அதே டிரெண்ட் தற்போது சின்னத்திரையிலும் தொடர்கிறது. மிர்ச்சி செந்தில் – ஸ்ரீஜா தொடங்கி, ஆலியா மானசா – சஞ்சீவ், சித்து – ஸ்ரேயா, சேத்தன் – தேவதர்ஷினி என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த லிஸ்ட்டில் புதிதாக இணைந்திருப்பவர் தான் பிரேம் ஜேக்கப். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் என்கிற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மலையாள சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான பிரேம் ஜேக்கப் தற்போது நீ நான் காதல் என்கிற தொடர் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். அண்மையில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரின் நாயகன் பிரேம் ஜேக்கப்பிற்கு திருமணம் நடைபெற்று உள்ளது. இவர் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஸ்வாசிகா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவர்களது திருமணம் கேரளாவில் வைத்து நடைபெற்று உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது

ஒருவழியாக குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதை பார்த்த ரசிகர்களும் திரையுலக மற்றும் சின்னத்திர பிரபலங்களுக்கு சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த காதல் ஜோடியின் திருமண புகைப்படங்களும் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றனர்.நடிகை ஸ்வாசிகா தமிழில் வைகை என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இவர் கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதுதவிர மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். நடிகர் பிரேம் ஜேக்கப் உடன் சீரியலில் நடித்தபோது தான் அவர் மீது காதலில் விழுந்தார் ஸ்வாசிகா. இந்த ஜோடியின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *