அந்தமாதிரி விஷயங்கள் என்றால் ஓப்பனாக சொல்லிவிடுவேன்…! நடிகை மஹிமா நம்பியார்…! ஷாக்கான ரசிகர்கள்…!

நடிகை மஹிமா நம்பியார் தனது குணாதிசயங்கள் குறித்து பேசியுள்ளார். மஹிமா நம்பியார் கடந்த 2010ம் ஆண்டு நடிகர் திலீப் நடித்த காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் மஹிமா நம்பியார். பின்னர் சாட்டை என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.தொடர்ந்து என்னமோ நடக்குது, மொசக்குட்டி, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் நடித்த 800 என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மஹிமா, பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவரிடம் “நீங்கள் மிகவும் வெளிப்படையாக, தைரியமானவராக இருக்கிறீர்கள், அதைப்பற்றி கூறுங்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு பதிலளித்த மஹிமா நம்பியார் ” சினிமாவில் இருப்பதனால் வயதை சொல்லக்கூடாது, சில விஷயங்கள் எல்லாம் பேசக்கூடாது என்றெல்லாம் உள்ளதுதானே?. ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

நான் வெளிப்படையான நபர். எனக்கு மறைக்கத் தெரியாது. நீங்கள் ஏதாவது கேட்டீர்கள் என்றால், சொல்ல முடிகிற விஷயங்கள் என்றால் ஓப்பானாக உண்மையை சொல்லி விடுவேன். மற்றபடி தைரியமானவர், வலிமையானவர் என்றெல்லாம் கிடையாது. எனக்கு கோபம் வராது. அப்படி என்னை எரிச்சல் படுத்தும், கோபப்படுத்தும் சூழ்நிலை வந்துவிட்டால், நான் அந்த இடத்தை விட்டு விலகி போய் விடுவேன். இல்லையென்றால் அமைதியாகி விடுவேன்” என்று மஹிமா நம்பியார் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *