என் நண்பர்களே என்னிடம் அதை கேட்டார்கள்…! வேதனையை கொட்டி தீர்த்த நடிகை கிரண்…! ஷாக்கான ரசிகர்கள்…!

நடிகை கிரண் சமீபத்திய பேட்டி ஒன்றியம் தன்னுடைய மன வேதனைகளை போட்டு உடைத்து இருக்கிறார். சினிமாவில் நான் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த பொழுது நான் நண்பர்கள் என்று எனக்கு நெருக்கமாக வட்டாரத்தில் வைத்துக் கொண்டிருந்த சில நபர்கள் என்னுடைய பட வாய்ப்பு குறைந்த பிறகு என்னுடைய வங்கி இருப்பு குறைந்த பிறகு என்னிடம் நடந்து கொண்ட முறை என்னை காயப்படுத்தியது என பேசி இருக்கிறார். அவர் பேசியதாவது தமிழ் சினிமாவில் நான் நிறைய முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறேன். நிறைய படங்களை தவற விட்டிருக்கிறேன்.ஆனால் பாலிவுட்டில் எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கு பட வாய்ப்புகள் எந்த மொழியிலும் இல்லை என்று ஆன பிறகு

என்னுடன் பழகிய நண்பர்களே என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள கேட்டார்கள். அவர்களை நான் எந்த உயரத்தில் வைத்திருந்தேன். அவர்களைப் பற்றி என்னவெல்லாம் நினைத்து வைத்திருந்தேன். ஆனால் என்னுடைய கடினமான காலத்தில் எனக்கு துணை நிற்காமல் என்னை பலியாக்க அவர்கள் துணிந்தார்கள்.இதுதான் நான் மிகவும் நொடிந்து போய் விட்டேன். நண்பர்களாக பழகிய இவர்கள் இப்படியான எண்ணத்துடன் தான் என்னிடம் பழகி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

பட வாய்ப்பு கேட்டு சென்றபோது என்னுடைய நண்பர்களே அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால் பட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்கள். அதனை தவிர்க்க அந்த இடத்தில் இருந்து நான் வெளியே வந்து விட்டேன். பட வாய்ப்புக்காக ஒருநாளும் இப்படியான வேலைகளை நான் செய்யவே மாட்டேன் என்று பேசி இருக்கிறார் நடிகை கிரண். மறுபக்கம் இணைய பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளைக் காண முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *