குடிபோதை கூத்து, பார்ட்டி சக நடிகைகள் குறித்து நடிகை ரெஜினா உடைத்த சீக்ரெட்…! அதை கேட்டு பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள் …!

ஒரு வார்த்தை என்றாலும் அதனை நச்சன பொட்டில் அடித்தார் போல் பதிவு செய்திருக்கிறார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரெஜினா தனக்கு நேர்ந்த அத்துமீறல்கள் சீண்டல்கள் குறித்து பேசினார். இறுதியாக தனக்கு நேர்ந்த சம்பவம் ஒன்றையும் பதிவு செய்திருந்தார். வாக்கிங் செல்லும் பொழுது ஒரு நபர் தன்னை வீடியோ எடுப்பதை உணர்ந்து அவரிடம் சென்று சண்டை போட்ட விஷயத்தை பதிவு செய்திருந்தார். அதனை நம்முடைய தளத்திலேயே பார்த்து இருந்தோம். அதே பேட்டியில் நடிகை ரெஜினா இன்னொரு விஷயத்தையும் கூறியிருந்தார். அவர் கூறியதாவது பொதுவாக நடிகைகள் குடிக்கிறார்கள் போதையில் இருக்கிறார்கள் கூத்தடிக்கிறார்கள் பார்ட்டி செய்கிறார்கள். ஆமாம்.. உண்மை தான்.

அதனால் அவர்கள் எல்லா விஷயத்துக்கும் சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.அவர் அவருடைய வாழ்க்கையை கொண்டாடுகிறார். அவருடைய கொண்டாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அவருடைய நடத்தையை நீங்கள் கேள்விக்குறியாக்க முடியாது. அது தவறு.ஒரு நடிகை பார்ட்டி செய்கிறார் குடித்துவிட்டு கூத்தடிக்கிறா. இந்த காரணத்திற்காக அவர் உங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வார் என்று என்பது தவறு. இதைவிட இன்னொரு விஷயமும் சொல்கிறேன். அவர் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார். ஆனால் உங்களுடன் அதனை செய்ய மறுக்கிறார் என்றால் அவரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம்.

உங்களை பிடிப்பதும் பிடிக்காமல் போவதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது. அவர் மற்றவர்களுடன் அப்படி இருக்கிறார். என்னிடமும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதற்கு நீங் கள் யார்..? உங்களை அவருக்கு பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை. அவ்வளவுதான். அவருடைய கேரக்டரை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் அத்துமீறலாம் என்று நினைப்பது தவறான விஷயம் என்று நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ஒன் லைன் போல நோ மீன்ஸ் நோ என்ற தொணியில் நடிகை ரெஜினா தன்னுடைய பேட்டியில் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். இவருடைய இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *