பள்ளியில் படிக்கும் போதே எனக்கு அது இருந்துச்சு…! ஓப்பனாக பேசிய பிரக்யா நாக்ரா…!

பிரபல இளம் நடிகை பிரக்யா நாக்ரா தன்னுடைய வாழ்க்கை நகர்வுகள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் ஜமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது N4 என்ற தமிழ் திரைப்படத்திலும் ஒரு மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார். இதனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கூவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நடிகைகளில்

ஒருவர் ஆனால் இவருக்கு தமிழ் மொழி தெரிந்திருக்கிறது. என்னதான் வடநாடு நடிகையாக இருந்தாலும் அவருக்கு தமிழ் தெரியும் என்றால் தமிழ் சினிமாவில் ஜொலிப்பது என்பது கொஞ்சம் கடினமான விஷயம். ஆனால், நடிகர் பிரக்யா நாக்ரா-வுக்கு இந்த பிரச்சனை வரும் என்று சொல்ல முடியாது ஏனென்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறார்.சினிமா என்றாலே கவர்ச்சி தான். ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதனை கொடுப்பதுதான் ஒரு நடிகையாக என்னுடைய வேலை என்று கூறுகிற ஒரு பிராக்டிக்கலான ஆளாக இருக்கிறார் அம்மணி.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டவர் முதன் முதலில் உங்களுடைய பிரேக் அப் எப்போது நடந்தது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ ஆசைப்படுகிறீர்களா..? அல்லது திருமணம் செய்து கொண்டு வாழ ஆசைப்படுகிறார்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை எனக்கு பள்ளியில் படிக்கும் போது என்னுடைய வகுப்பு நண்பர் மீது எனக்கு கிரஷ் ஏற்பட்டது. அவரை காதலிக்க தொடங்கினேன். ஒரு கட்டத்தில் பிரேக்-அப்பும் ஆனது. அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. லிவிங் ரிலேஷன்ஷிப்பா..? திருமணமா..? என்று கேட்டால் திருமணம் செய்து கொண்டு வாழ்வது தான் சரியானது என கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *