பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மிருணாள் தாகூர். இவர் கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் என்ற திரைப்படத்தில் சீதா மகாலட்சுமி ரோலில் நடித்து தென்னந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து இவருக்கு தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மிருணாள் தாகூர், நான் சொல்லக்கூடிய விஷயம் உங்களுக்கு வித்தியாசமானதாக தெரியலாம். என் காதலன் வேறொரு பெண்ணை டேட்டிங் சென்றால் கூட எனக்கு பிரச்சனை இல்லை.நான் சொல்லக்கூடிய விஷயம் உங்களுக்கு வித்தியாசமானதாக தெரியலாம். என்னுடைய காதலன் இன்னொரு பெண்ணுடன் டேட்டிங் செல்கிறார் என்றாலும் எனக்கு பிரச்சனை கிடையாது.
ஆனால் அதுவே அவருடைய பழக்கமாக இருக்கக் கூடாது. ஏதேனும், ஒரு முறை இரண்டு முறை.. எப்போதாவது என்றால் எனக்கு பிரச்சனையே கிடையாது. ஆனால், அந்த விஷயத்தை என்னிடம் மறைக்கக் கூடாது. எந்த விஷயத்தையும் என்னிடம் இருந்து மறைக்க கூடாது. அவர் என்னிடம் எதையும் மறைக்க கூடாது என்றால் அந்த அளவுக்கு அவர் என்னிடம் சுதந்திரத்தை உணர வேண்டும். ஒருவேளை நான் அவருக்கு கட்டப்பாடுகளை விதித்தால் அதுவே பல விஷயங்களை அவர் என்னிடம் மறைப்பதற்கு காரணமாக அமைந்து விடும். ஆனால் அது பழக்கமாக மாறிட கூடாது. என்னிடம் எந்த விஷயத்தையும் மறைக்க கூடாது. எல்லாத்தையும் சொல்லவேண்டும்.
அவரை என்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கமாட்டேன். அவர் சுதந்தரமாக இருக்க வேண்டும் என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார். ஆனால் ஒரு விஷயத்தை மறைக்க நினைப்பது பிரிவுக்கு தான் வழிவகுக்கும். அதனால் இருவருக்குமே மிகப்பெரிய இழப்பு ஏற்படும். காதல் என்பது நிபந்தனை அற்றதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட நிபந்தனையை தாங்கி இருக்கும் காதல், காதலே கிடையாது. கணவன் மனைவியோ அல்லது காதல் காதலியோ ஆண் பெண் உறவு என்று வரும் பொழுது அங்கே சில விஷயங்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். வெளிப்படை தன்மை இருக்கும் இடத்தில் கண்டிப்பாக உறவு மிகவும் வலுவாக இருக்கும். நான் என் காதலனுடன் மிகவும் வலுவான உறவில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.