நானும் மனுஷி தானே…! இதனால் தான் கவின்-ஐ பிரிந்தேன்…! ரகசியம் உடைத்த லாஸ்லியா…!

நடிகை லாஸ்லியா நடிகர் கவின்-ஐ பிரிந்த காரணம் என்ன..? என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நானும் கவினும் காதலித்தோம் என்பது உண்மை. நாங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் எங்கள் உலகம் மிகவும் சிறியது. அங்கு ஒரு மனநிலையில் இருக்க வேண்டிய சூழல். அந்த இடத்தில் இருவரும் ரிலேஷன்ஷிப்-பில் இருந்தோம் என்பது உண்மை தான்.

நான் இல்லவே இல்லை என்று மறுக்க வில்லை. ஆனால், நாங்கள் பிரிந்ததற்கு காரணம் இருக்கிறது. நான் முன்பே சொன்னது போல, பிக்பாஸ் என்பது சின்ன உலகம்.. அங்கு இருப்பவர்கள் தான் சமூகம். ஆனால், பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே உலகமே சமூகம் தான். பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த மனநிலை.. வெளியே வந்த பிறகு இல்லை.

நானும் மனுஷி தானே.. எல்லாருமே மனிதர்கள்.. பிக்பாஸ் வீட்டில் எங்களுக்குள் இருந்த அந்த பாண்டிங்.. வெளியே இல்லாமல் போய்விட்டது.. எங்கள் ரிலேஷன்ஷிப்-பை தொடர முடியாமல் போய்விட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எங்கள் இருவருக்கும் செட் ஆக வில்லை. அதனால், பிரிந்து விட்டோம் என வெளிப்படையாக பதிவு செய்துள்ளார் நடிகை லாஸ்லியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *