சினிமா துறையில் கவர்ச்சி காட்டாமல் நாயகிகள் நீடிக்க முடியாது என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி மாடல் அழகியாக இருந்து பின்னர் நாயகியாக மாறியவர் ஐஸ்வர்யா லட்சுமி. 2017-ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான “ஆக்க்ஷன்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். மலையாளத்தில் இளம் நாயகியாக இருந்த இவர்க்கு “ஆக்க்ஷன்” படம் பெரிய வெற்றியை தரவில்லை என்றாலும்
அதனை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் வர துவங்கின.தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில் தயாரான “பொன்னியின் செல்வன்” படத்தில் பூங்குழலியாக நடித்து மிகவும் பிரபலமடைந்தார். அந்த படத்தை தொடர்ந்து வெளியான விஷ்ணு விஷாலின் “கட்டா குஸ்தி” படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
நீடிக்க முடியாது தற்போது தென்னிந்திய மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் திரையுலக அனுபவங்களையும், தன்னுடைய பயணத்தையும் குறித்து பேசினார்.அதில், கவர்ச்சியில்லாமல் இப்போதெல்லாம் சினிமாவில் நீடிக்க முடியாது என வெளிப்படையாக கருத்து தெரிவித்த ஐஸ்வர்யா லட்சுமி, ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் போக போக கவர்ச்சி காட்டி தான் ஆக வேண்டும் என கூறினார்.