படப்பிடிப்பில் தூங்கும் போது விஜய் இப்படி பண்ணுவார்-ன்னு நெனச்சி பாக்கல…! ராஷ்மிகா மந்தனா வேதனை…!

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். அவர் பேசியதாவது ஒரு நாள் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு ஒரு டேபிள் இருந்தது. அதில் தலையை சாய்த்து அப்படியே தூங்கிவிட்டேன். விஜய் சார் அப்போது அந்த இடத்திற்கு வந்து இயக்குனரை அழைத்து இங்கே பாருங்க.. ஷூட்டிங் வருகிறார்.. சாப்பிடுகிறார்.. தூங்குகிறார்.. சென்று விடுகிறார்.

அடுத்த நாள் சூட்டிங் வருகிறார்.. சாப்பிடுகிறார்.. தூங்குகிறார்.. சென்று விடுகிறார். இதுதான் வாரிசு படத்தில் இவருடைய பங்களிப்பாக இருக்கிறது என்று கலாய்த்து இருக்கிறார். விஜய் கூறியது போல, வாரிசு திரைப்படத்தில் எனக்கு பெரிய ஸ்கோப் எதுவும் இல்லை. என்னுடைய ஸ்க்ரீன் ஸ்பேஸ் மற்றும் என்னை சார்ந்த காட்சிகளும் குறைவாக தான் இருக்கும்.இதை தெரிந்தே தான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

விஜய் படம் என்பதால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டீன். படப்பிடிப்பு டேட் கொடுத்து விட்டேன். ஆனால், எனக்கான காட்சிகள் இல்லை எனும் பொழுது நான் என்ன செய்வது..? தூங்கி விட்டேன். அதனை இயக்குனரை அழைத்து என்னை போட்டுக் கொடுத்து விட்டார். அதை நான் மறக்கவே மாட்டேன். விஜய் சார் இப்படி பண்ணுவார் என்று நினைத்து கூட பார்க்கல.. என்று கூறி இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *