விஜய் சேதுபதி தமிழ் மொழி படங்களை தாண்டி பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாகி வைத்திருப்பவர் தான் விஜய் சேதுபதி.இயக்குனரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே நடிகர்களின் கடமை என்பதால் சட்டை இன்றி பயந்தபடியே நடித்தேன் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் சேதுபதி, அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அதேபோல் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று முரண்டுபிடிக்காமல், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.
குறிப்பாக ரஜினிக்கு வில்லனாக பேட்ட, விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ள இவர்அண்மையில் கமலின் விக்ரம் படத்திலும் வில்லனாக மிரட்டினார். இப்படத்தில் சந்தானம் என்கிற போதை கடத்தல் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரத்தின் எண்ட்ரி சீனில் நடிகர் விஜய் சேதுபதி, சட்டை இன்றி நடித்திருப்பார்.இந்த சீன் செம்ம மாஸாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் படத்தில் வில்லனாக நடித்து பாலிவுட்டிலும் பிரபலமானார்.’
இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி, தெலுங்கில் வெளியான உப்பேனா என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக நடித்தேன். இந்த படத்திற்கு பின்பு நான் தமிழ் படத்தில் ஒப்பந்தம் ஆனேன்.அந்த படத்தில் கீர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டனர். இதை அறிந்த நான் உடனடியா படுக்குழுவிற்கு அழைத்து, கீர்த்தி ஷெட்டிகு அப்பாவாக நடித்துவிட்டேன்.அவர் எனக்கு மகள் போன்றவர். அவருடன் எனக்கு ரொமான்டிக்காக நடிக்க முடியாது. அதனால் அவரை ஹீரோயினாக தவிர்க்கவும் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.