நடிகை சதா தான் நடித்த காட்சி ஒன்று குறித்து வேதனை தெரிவித்துள்ளார். நடிகை சதா தமிழில் ஜெயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சதா. முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார்.தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற படங்களில் அஜித், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என பல முன்னணி நடிகர்களுடன் வலம் வந்தார்.மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், தேஜா படத்தில் ஒரு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன்.
என் கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது.அது கசப்பான சம்பவம் தான் எனக்கு.அந்த படத்தில் சதா கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் தனது நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. “அந்த காட்சியில் நடித்ததற்காக இப்போதுவரை வேதனைப்படுகிறேன். அப்படி நடிக்க மாட்டேன் என்று இயக்குனரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அந்த காட்சி படத்துக்கு முக்கியம் என்று சொல்லி படமாக்கி விட்டார். இது போன்ற காட்சியில் நடிக்கமாட்டேன் என்று இயக்குனரிடம் சொன்னேன்.
ஆனால் படத்தில் இந்த காட்சி வேணும் என சொல்லி நடிக்க சொல்லி அதை படமாக்கி விட்டார். அந்த காட்சியை எடுத்த பின் வீட்டுக்கு சென்று அழுதேன் எனக்கு சினிமாவில் ரொம்பவும் மோசமான நிகழ்வு இதுதான் என வேதனை தெரிவித்துள்ளார். அந்த காட்சி எடுத்த பிறகு வீட்டுக்கு சென்று நிறைய நேரம் அழுதேன். என் முகத்தை மீண்டும் மீண்டும் கழுவிக்கொண்டேன். இப்போதுகூட டி.வி.யில் அந்த காட்சி வந்தால் அதை பார்க்காமல் வெளியேறி விடுவேன்” என்றார்.