பிரபல நடிகர் அசோக் செல்வன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் நீங்கள் திருடிய விலை உயர்ந்த பொருள் என்ன..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. சிறிது நேரம் யோசித்த அசோக் செல்வன்.. அதன் பிறகு தன்னுடைய பதிலை கொடுத்தார். ஒருமுறை நானும் என் நண்பனும் ஒரு பொருட்காட்சிக்கு சென்றிருந்தோம். அங்கே நிறைய பட CD-களை வாங்கினோம். அத்துடன் C U at 9 என்ற திரைப்படத்தின் CD-ஐயும் வாங்க ஆசைப்பட்டோம். ஆனால் அப்போது எங்களுக்கு 14 வயது தான்.
இந்த படத்தை கொண்டு போய் எப்படி பில் போடுவது என்று பயந்து கொண்டு அதனை திருடி விட முடிவு செய்தோம்.அதேபோல திருடியும் விட்டோம். ஆனால், அதனை எடுத்துக்கொண்டு வெளியே வரும்பொழுது அங்க இருந்த ஒரு மிஷின் பீப் பீப் என கத்தி எங்களை போட்டுக் கொடுத்து விட்டது. கையும் களவுமாக சிக்கிக் கொண்டோம்.அதன் பிறகு எங்களுடைய பெற்றோர்கள் வந்து தான் எங்களை அழைத்துச் சென்றார்கள் என்று கூறியிருக்கிறார் நடிகர் அசோக் செல்வன்.
இவர் கூறிய C U at 9 படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தது வேறு யாரும் கிடையாது நம்ம கவர்ச்சி ராணி மாளவிகா தான். தன்னுடைய சினிமா வரலாற்றிலேயே படுமோசமான காட்சிகளில் படுக்கை அறை காட்சிகளில் நடித்து பதற வைத்தார் மாளவிகா. இன்டர்நெட் வசதி பெரிதாக இல்லாத அந்த காலத்திலேயே இந்த திரைப்படம் ப்ளூடூத் வழியாகவே நாடு முழுதும் வைரலானது என்பது 90ஸ் கிட்ஸ்கள் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு பகுதி.