பிரபல சீரியல் நடிகை சம்யுக்தா சமீபத்தில் தன்னுடைய காதல் கணவர் விஷ்ணுகாந்தை பிரிந்தார். பிரிந்தது மட்டுமில்லாமல் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை, பொதுவாக பெண்கள் நடிகைகள் சொல்ல தயங்கும் விஷயங்களை கூட வெளிப்படையாக பேசியிருந்தார்.ன்னுடைய கணவர் விஷ்ணுகாந்த் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். தினமும் ஆபாச வீடியோவை காட்டி அந்த மாதிரி பண்ணனும் என்று சொல்லி தன்னை அடித்ததாக சம்யுக்தா கூறி இருக்கிறார். என்னுடைய வலிகளை புரிந்து கொள்ளாமல் முரட்டுத்தனமாக விஷ்ணுகாந்த் நடந்து கொள்வார் என்றும் கூறியிருக்கிறார்.
அதே சமயம் நடிகர் விஷ்ணுகாந்தும் சம்யுக்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். உச்சகட்டமாக சம்யுக்தா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று எல்லாம் கூறியிருந்தார். தனை தொடர்ந்து பேட்டி ஒன்றில் பேசிய சம்யுக்தா, நான் ஓரினச்சேர்க்கையாளர் என்று விஷ்ணுகாந்த் கூறுகிறார்.. நான் ஓரினச்சேர்க்கை செய்தேன் என்றால் நான் யாருடன் இருந்தேன் அவருடைய என் தோழியின் பெயர் என்ன என்று அவர் ஏன் கூறவில்லை.அந்த தோழியின் பெயரை கூறியிருந்தால் விஷயமே வேற மாதிரி ஆகியிருக்கும். ஏனென்றால் என்னுடைய தோழி உச்சகட்ட அந்தஸ்தில் இருப்பவர்.
அவருடைய பெயரை குறிப்பிட்டு இருந்தால் விஷ்ணுகாந்தின் வாழ்க்கையே வீணா போயிருக்கும். அதனை தெரிந்து கொண்டு தான் அவருடைய பெயரை கூறாமல் தவிர்த்து விட்டார். உண்மையான குற்றச்சாட்டாக இருந்தால் அவருடைய பெயரை கூறியே இவர் அந்த குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கலாம். ஆனால் குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக என் மீது அபாண்டமான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் என்று பேட்டியில் பகீர் தகவலை பதிவு செய்திருக்கிறார் சம்யுக்தா.