முன்னணி நடிகருடன் ஒரே வீட்டில் அனுஷ்கா குடித்தனம்…! பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

நடிகை அனுஷ்கா ஷெட்டி தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். ஆரம்பத்தில் யோகா ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த நடிகை அனுஷ்கா-வின் யோகா வகுப்பில் சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டதாகவும் அதன் மூலம் தான் நடிகை அனுஷ்காவுக்கு சினிமா பழக்கம் ஏற்பட்டு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது. சினிமாவில் நுழைந்த வேகத்தில் தன்னுடைய கவர்ச்சி கயிற்றை கொண்டு ரசிகர்களை கட்டிப்போட்ட அனுஷ்கா தமிழ், தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார்.இந்நிலையில், இவர் பிரபல நடிகர் ஒருவருடன் திருமணமே செய்து கொள்ளாமல் லிவின் ரிலேஷன்ஷிப்பில்

ஒரே வீட்டில் வசித்து வந்தார் என்று பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்  ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். நடிகை அனுஷ்கா பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் கதாநாயகன் பிரபாஸுடன் காதல் வயப்பட்ட நடிகை அனுஷ்கா அவரை சில காலம் காதலித்து வந்ததாகவும் ஆனால் இருபது வீட்டிலும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணமே செய்து கொள்ளாமல் ஒன்றாக

ஒரே வீட்டில் சில காலம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்கள் என்றும் கூறப்பட்டது.இந்த விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்ததும் இருவரும் பிரிந்து விட்டார்கள் எனவும் ஆனால், தற்போது வரை இருவரும் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார். நடிகை அனுஷ்கா இடையில் ஒரு படத்தில் நடிப்பதற்காக உடனடி கூடி தற்போது உடல் எடை குறைக்கவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பதிவு செய்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *