என்னது, சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் நடிகை சாய் பல்லவி திருமணமா…! வைரலாகும் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக ஆரம்பித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார் நடிகை சாய் பல்லவி.‘டான்’ படத்துக்குப் பிறகு அனுதீப் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றுக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு படங்கள் தவிர ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தினை சோனி நிறுவனத்துடன் இணைந்து கமல் தயாரிக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.தற்போது இந்தப் படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணையும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை இயக்கி வருபவர் ராஜ்குமார் பெரியசாமி. இதன் மூலம் அவருக்கு சாய் பல்லவியின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவரது கதையைக் கேட்டவுடனே தேதிகள் ஒதுக்கி, நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சாய் பல்லவி. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து பிஸியாகினார் சாய் பல்லவி.சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் பல வெற்றியை பெற்றும் வந்திருக்கிறது. இதுவரை நெருக்கமான காட்சி கிளாமர் காட்சியில் நடிக்காமல் வந்திருக்கும் சாய் பல்லவிக்கு

தற்போது 31 வயதாகிறது. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமியை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அது சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் பூஜை என்றும் அப்படத்தில் நடிகை சாய் பல்லவியும் நடிக்கிறார் என்றும் கமல் தயாரிப்பில் உருவாகி வருகிறது என்றும் கூறி வருகிறார்கள். சாய் பல்லவி திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் இணையத்தில் பலர் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *