லண்டனில் சிம்புவின் கதாநாயகிக்கு நேர்ந்த சோகம்…! வேறு துணி கூட இல்லாமல்…! இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது…!

பெரும்பாலும் விமான பயணங்கள் என்பது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிகப்பெரிய விஐபிகளுக்கு கூட பல நேரங்களில் கசப்பான அனுபவங்களை தந்து விடுகிறது. இதுபற்றி பல நடிகர், நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இன்னும் சிலர் அப்படி கசப்பான அனுபவங்களை ஏற்படுத்திய விமான நிறுவனங்களை உண்டு இல்லை என லெப்ட் ரைட் வாங்கிய நிகழ்வுகளும் உண்டு.அந்த வகையில் தற்போது அப்படி ஒரு கசப்பான அனுபவத்திற்கு ஆளாகி இருப்பவர் பாலிவுட் நடிகை சனா கான். இப்படி சொன்னால் பலருக்கும் தெரியாது. நடந்த 2007ல் சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் இந்த சனா கான்.

அதுமட்டுமல்ல அதே சிம்புவுடன் மீண்டும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திலும் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு பெரிய அளவில் தமிழிலும் இந்தியிலும் பட வாய்ப்புகள் இல்லாததால் சூரத்தை சேர்ந்த முப்தி அனாத் சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை ஒன்றுக்கும் தாயானார் சனா கான். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டனுக்கு இந்த தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் கிளம்பி சென்றுள்ளனர். ஆனால் லண்டன் விமான நிலையத்தில் இறங்கியதும் இவர்களது லக்கேஜை தேடியபோது கிடைக்கவில்லை. விசாரித்ததில் இவர்கள் இடையில் இன்னொரு விமானத்தில் மாறி பயணித்துள்ளனர்.

அப்போது முதல் விமானத்திலிருந்து இரண்டாவது விமானத்திற்கு இவர்களது லக்கேஜ் ஏற்றப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து அங்கே புகார் அளிக்க சென்றாலும் அதை கேட்டு சரிசெய்ய சரியான நபர்கள் இல்லை என கூறியுள்ளார் சனா கான். அதுமட்டுமல்ல கடந்த இரண்டு நாட்களாகவே தானும் தன கணவரும் வேறு துணி இன்றி ஒரே உடையை அணிந்து கொண்டு இருப்பதாகவும் குழந்தைக்கு அடிக்கடி துணிகள் மாற்ற வேண்டி இருப்பதால் அதுவும் தங்களது லக்கேஜிலேயே தங்கி விட்டதால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும் கூறி இருக்கும் அவர், விமான நிறுவனங்கள் இதுபோன்று பயணிகளை சங்கடத்தில் ஆழ்த்தக்கூடாது. எங்களுக்கு வேண்டிய உதவியை உடனடியாக செய்யுங்கள்” என்று புலம்பி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *